ஆப்நகரம்

உணவுப் பாதுகாப்புத்துறைக்கு 2,000 மேற்பட்ட வாட்ஸ் அப் புகார்கள்

சாலையோர கடைகளில் உடல் நிலைக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் வழங்கப்படுவதாக, உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Samayam Tamil 17 May 2018, 2:05 pm
சாலையோர கடைகளில் உடல் நிலைக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் வழங்கப்படுவதாக, உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Samayam Tamil 20120211-Indianvegstreetfood-chaatshop


தரமற்ற மற்றும் சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் உணவுகளை பற்றிய புகார்களை தெரிவிக்க, 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணை உணவு பாதுகாப்புத் துறை அறிவித்தது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த எண்ணிற்கு 2 ஆயிரத்து 464 புகார்கள் வந்துள்ளன. மேலும் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலையோரக் கடைகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள், தட்டுக்களில் உணவு பரிமாறப்பட்டதாக எழும் புகார்களின் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உணவு சார்ந்த தொழில் செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 77.4 சதவீத உணவு விற்பனையாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாகஉணவுப் பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

தரவுகளை சேகரிக்கும் அமைப்பாக மட்டுமின்றி விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உணவுப் பாதுகாப்புத்துறை செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டால்தான் மாற்றம் ஏற்படும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி