ஆப்நகரம்

ஒரு கிலோ கோதுமை ரூ. 2 , அரிசி ரூ.3 : மத்திய அரசின் புதிய திட்டம்

மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட உள்ளது.

TNN 3 Nov 2016, 4:40 pm
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil food security programme to cost rs 1 4 trillion a year food minister
ஒரு கிலோ கோதுமை ரூ. 2 , அரிசி ரூ.3 : மத்திய அரசின் புதிய திட்டம்


மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடந்த ஆட்சி காலத்தில் ​ காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த திட்டத்தின் படி, நாடு முழுவதும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட உள்ளது என்றும் , இதற்காக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் மூலமாக நகர்புறத்தில் வசிக்கும் 50சதவீத மக்களும், கிராமப்புறத்தில் வசிக்கும் 75 சதவீத மக்களும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி