ஆப்நகரம்

ஓட்டுக்காக பாடுபடவில்லை நாட்டுக்காக பாடுபடுகிறோம்: பிரதமர் மோடி

உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பங்கேற்று பேசிய மோடி. எங்கள் அரசிற்கு ஓட்டு வாங்குவது முக்கியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

TNN 23 Sep 2017, 3:18 pm
வாரணாசி: உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பங்கேற்று பேசிய மோடி. எங்கள் அரசிற்கு ஓட்டு வாங்குவது முக்கியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil for us governance is not about votes or winning polls
ஓட்டுக்காக பாடுபடவில்லை நாட்டுக்காக பாடுபடுகிறோம்: பிரதமர் மோடி


உத்திரப் பிரதேச மாநிலம் செஹன்ஷாபூரில் நடந்த நிகழ்ச்சியில் சிறு விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய மோடி, எங்களது அரசாங்கத்திற்கு ஓட்டு முக்கியமில்லை நாட்டின் வளர்ச்சியே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோடி, பசுதன் ஆரோக்ய மேளா என்ற கால்நடைகளுக்கான நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். அப்போது, முந்தைய அரசு கால்நடைகளை பராமரிக்கத் தவறிவிட்டதாகவும், அதனால் பால்வளத் துறை பாதிப்படைந்ததாகவும் கூறினார். இந்தத் திட்டத்தினால் விவசாயிகள் நலம் பெறுவார்கள் என்று தெரிவித்ததோடு,. இந்தத் திட்டங்களுக்காக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

பேசுகையில் தூய்மை இந்தியாவைக் குறிப்பிட்ட மோடி, “தூய்மையான இந்தியாவே ஆரோக்கியமான இந்தியா”,என்று தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் மோடி வாரணாசி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

For us, governance is not about votes or winning polls: PM Modi

அடுத்த செய்தி