ஆப்நகரம்

நாடு திரும்பிய உஸ்மாவுக்கு சுஷ்மா வாழ்த்து!

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்ட இந்தியப் பெண் உஸ்மா அந்நாட்டு நீதிமன்ற அனுமதி பெற்று நாடு திரும்பியுள்ளார்.

TNN 25 May 2017, 2:50 pm
டெல்லி: பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்ட இந்தியப் பெண் உஸ்மா அந்நாட்டு நீதிமன்ற அனுமதி பெற்று நாடு திரும்பியுள்ளார்.
Samayam Tamil forced to marry a pakistani indias uzma finally returns home
நாடு திரும்பிய உஸ்மாவுக்கு சுஷ்மா வாழ்த்து!


பாகிஸ்தான் சென்றிருந்த இந்தியப் பெண் உஸ்மா, பாகிஸ்தானியர் ஒருவரால் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாக புகார் கூறினார். இதன் பின் தாய்நாடு திரும்ப அவர், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். அதனை ஏற்ற நீதிமன்றம் அவரை நாடு திரும்ப அனுமதித்துள்ளது.

இதனையடுத்து, உஸ்மா இன்று வாகா எல்லை வழியாக இந்தியா வந்தார். அவரை வரவேற்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“உஸ்மா, இந்தியாவின் மகளே! உன்னை வரவேற்கிறேன்! பாகிஸ்தானில் நேர்ந்த துயரத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.” என்று சுஷ்மா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி