சண்டிகர்: கள்ளக்காதல் சந்தேகத்தினால் கிராம மக்கள் அளித்த துன்புறுத்தலால் அந்த ஊரை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு பெண் ஒருவர் குடி பெயர்ந்துள்ள பரிதாபகரமான சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள பர்னாலா எனும் கிராமத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், மறுவாழ்வு மையம் ஒன்றில் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அப் பெண்ணுக்கும், அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகமடைந்த அக்கிராம மக்கள், கிராம கட்டப் பஞ்சாயத்தை கூட்டி அப்பெண்ணை அடித்து, அவரையும் அந்த இளைஞரையும் செருப்பு மாலை போடச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அப்பெண், மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் வேறு ஒரு ஊருக்கு குடி பெயர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து களத்தில் குதித்த ஹரியானா மாநில பெண்கள் நல ஆணையம், அப்பெண்ணை சந்தித்து விவரங்களை கேட்டறிந்துள்ளது. அவர்களிடம் தான் தாக்கப்பட்டதாக கண்ணீர் விட்டு கதறிய அப்பெண், அச்சத்தின் காரணமாக தனது இருப்பிடத்தையும் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதி காவல் நிலையம் சென்ற மகளிர் ஆணைய தலைவர், இதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது, ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு முதற்கட்ட தகவல் அறிக்கை பதியப்பட்டு விட்டதாகவும், அது தொடர்பாக மூவரை கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை கைது செய்யும் பொருட்டு தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுடன் சேர்ந்து கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் போலீசார் வசம் இருப்பதாக தெரிகிறது. அந்த வீடியோ பதிவில், பெண்கள் உள்பட பலரும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
அதேசமயம், போலீசாரின் விசாரணை நடவடிக்கையில் தனக்கு திருப்தி ஏற்படவில்லையெனில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள பர்னாலா எனும் கிராமத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், மறுவாழ்வு மையம் ஒன்றில் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அப் பெண்ணுக்கும், அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு இளைஞர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகமடைந்த அக்கிராம மக்கள், கிராம கட்டப் பஞ்சாயத்தை கூட்டி அப்பெண்ணை அடித்து, அவரையும் அந்த இளைஞரையும் செருப்பு மாலை போடச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அப்பெண், மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் வேறு ஒரு ஊருக்கு குடி பெயர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து களத்தில் குதித்த ஹரியானா மாநில பெண்கள் நல ஆணையம், அப்பெண்ணை சந்தித்து விவரங்களை கேட்டறிந்துள்ளது. அவர்களிடம் தான் தாக்கப்பட்டதாக கண்ணீர் விட்டு கதறிய அப்பெண், அச்சத்தின் காரணமாக தனது இருப்பிடத்தையும் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதி காவல் நிலையம் சென்ற மகளிர் ஆணைய தலைவர், இதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது, ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு முதற்கட்ட தகவல் அறிக்கை பதியப்பட்டு விட்டதாகவும், அது தொடர்பாக மூவரை கைது செய்துள்ளதாகவும், மற்றவர்களை கைது செய்யும் பொருட்டு தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுடன் சேர்ந்து கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் போலீசார் வசம் இருப்பதாக தெரிகிறது. அந்த வீடியோ பதிவில், பெண்கள் உள்பட பலரும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
அதேசமயம், போலீசாரின் விசாரணை நடவடிக்கையில் தனக்கு திருப்தி ஏற்படவில்லையெனில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.