ஆப்நகரம்

கிளம்பியாச்சு, கிளம்பியாச்சு; இனியும் இந்தியாவுல இருக்க முடியாது!

இந்தியாவில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகள் பெங்களூருவில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

Samayam Tamil 16 Apr 2020, 3:22 pm
உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் தொடர்ச்சியான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி இந்தியாவில் 12 ஆயிரத்து 769 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 426 பேர் பலியாகி இருக்கின்றனர். முன்னதாக வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Samayam Tamil பெங்களூரு விமான நிலையம்


தற்போது இரண்டாம் கட்டமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளிநாட்டு பயணிகள் வெளியேற முடியாமல் இந்தியாவில் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சிறப்பு விமானங்களை அனுப்பி தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகள் களத்தில் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பொதுப் போக்குவரத்து vs தனியார் வாகனங்கள்- ஊரடங்கிற்கு பின் ஏற்படப் போகும் மாற்றம்!

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக இவர்கள் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்தவர்கள்.

இந்நிலையில் வரும் 20ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக இங்கிலாந்து செல்வதற்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.

மேலும் 3,000 பேர் இந்தியாவின் 11 நகரங்களில் இருந்து 12 விமானங்கள் மூலம் விரைவில் புறப்பட உள்ளனர். ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் கிளம்பிச் சென்றனர்.

இதென்ன புது சிக்கல்? கொரோனா குணமானவருக்கு மீண்டும் அறிகுறி- குழம்பிய மருத்துவர்கள்!

இவர்களது வயது, உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜெர்மனி இத்தகைய ஏற்பாட்டைச் செய்திருந்தது. மற்ற பயணிகள் கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர். இதேபோல் ஏப்ரல் 12, 13, 14 ஆகிய தேதிகளில் பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னையில் இருந்து ஜப்பானைச் சேர்ந்த 722 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

அடுத்த செய்தி