அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், 1950 ஆம் ஆண்டில், அன்னை தெரசா மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை நிறுவினார். இது உலகின் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான அடிப்படையில் தனது சேவையை செய்து வருகிறது. இது, 4,500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளின் சபையைக் கொண்டுள்ளது. இந்த சாரிட்டியின் உரிமம் புதுப்பிக்கப்படாததால், அதன் வங்கிக் கணக்குகளை, கிறிஸ்துமஸ் அன்று மத்திய அரசு முடக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், "அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு தரப்பில் இருந்து முடக்கவில்லை என்றும், அந்த அமைப்பின் சார்பில் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கடிதம் எழுதியதாகவும், வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் (FCRA) கீழ் மிஷினரீஸ் ஆப் சாரிட்டி நிறுவனத்தின் உரிமையைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் சரியான முறையில் பூர்த்தி செய்யவில்லை என்றும், அதனால் தான், கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்றும் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் உரிமத்தை புதுப்பிக்க, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கான உரிமையை நேற்று வழங்கி உள்ளது. இதன் மூலம், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நிதியைப் பெறவும், பயன்படுத்தவும் முடியும்.
இந்த விவகாரம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேரக் ஓ பிரையன், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிக்கான FCRA உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அன்பின் சக்தி 56 இன்ச் மார்பளவு சக்தியை விட வலிமையானது," என பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக சாடி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், 1950 ஆம் ஆண்டில், அன்னை தெரசா மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை நிறுவினார். இது உலகின் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான அடிப்படையில் தனது சேவையை செய்து வருகிறது. இது, 4,500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளின் சபையைக் கொண்டுள்ளது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், "அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு தரப்பில் இருந்து முடக்கவில்லை என்றும், அந்த அமைப்பின் சார்பில் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கடிதம் எழுதியதாகவும், வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் (FCRA) கீழ் மிஷினரீஸ் ஆப் சாரிட்டி நிறுவனத்தின் உரிமையைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் சரியான முறையில் பூர்த்தி செய்யவில்லை என்றும், அதனால் தான், கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்றும் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் உரிமத்தை புதுப்பிக்க, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கான உரிமையை நேற்று வழங்கி உள்ளது. இதன் மூலம், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நிதியைப் பெறவும், பயன்படுத்தவும் முடியும்.
இந்த விவகாரம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேரக் ஓ பிரையன், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிக்கான FCRA உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அன்பின் சக்தி 56 இன்ச் மார்பளவு சக்தியை விட வலிமையானது," என பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக சாடி உள்ளார்.