ஆப்நகரம்

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தடை!

தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது

Samayam Tamil 4 Jun 2020, 6:46 pm
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மர்காஸா கட்டடத்தில் அமைந்துள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர், வெளிநாட்டினர் உள்பட ஒட்டுமொத்தமாக 7,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது எனவும், பலருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் பெரிய அளவில் நீடிக்கிறது.

இது தொடர்பாக, மாநாடு நடத்திய மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஏராளமானோரை கூட்டி மாநாடு நடத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மவுலானா சாத் உள்பட 6 பேர் மீது கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் டெல்லி போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதன் முதலாக இந்தியா - ஆஸி., இடையே மெய்நிகர் உச்சிமாநாடு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

அதேபோல், தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மவுலானாவின் அறக்கட்டளை மற்றும் அதில் நடைபெற்ற பண பரிவர்த்தணைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, தலைமைறைவான மவுலானாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், கொரோனா அறிகுறி காரணமாக தனக்குத் தானே மறைவான இடத்தில் அவர் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் 960 பேர் இந்தியாவுக்கு 10 ஆண்டுகள் வரத்தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி