ஆப்நகரம்

கொரோனா பயமே இல்லையா? இப்படி பார்ட்டி பண்றீங்களே - விபரீத கொண்டாட்டம்!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில் பெர்னேம் பகுதியில் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2020, 1:33 pm
ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு, போதிய சரீர இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விஷயங்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கோவாவில் உள்ள பெர்னேமில் சில வெளிநாட்டினர் பார்ட்டி ஏற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படியொரு நிகழ்வை பாலியம் மற்றும் ஆரம்போல் பகுதி மக்கள் சமீபத்தில் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதாவது கோவாவின் ஆரம்போல் அருகே உள்ள வனப்பகுதியில் மிகப்பெரிய ஆல மரத்திற்கு கீழே 30 மோட்டார் சைக்கிள்கள் நின்று கொண்டிருப்பதை தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த முந்திரி விவசாயி ஒருவர் பார்த்துள்ளார்.
Samayam Tamil கோவாவில் கொரோனா


உடனே அவர் ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் ஆரம்போல் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து இரு போலீசார் உள்ளூர் மக்களுடன் நிகழ்விடத்திற்கு சென்றனர். இதைக் கண்ட வெளிநாட்டினர் அங்கிருந்து தப்பி காட்டிற்குள் ஓடிவிட்டனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் சக்கரங்களில் இருந்த காற்றை பிடுங்கி விட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

கடைசி வாரத்தில் ஊரடங்கு; அடுத்து என்ன? பக்கா பிளானை ரெடி பண்ணும் மத்திய அரசு!

இதுபற்றி பெர்னேம் காவல் ஆய்வாளர் சந்தேஷ் சோதங்கர் கூறுகையில், வெளிநாட்டினர் பார்ட்டி செய்வதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர். உடனே நிகழ்விடத்திற்கு விரைந்தோம். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பியோடி விட்டதாக கூறினார். இதேபோல் அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் கோர்கங்கர் கூறுகையில், காவல்துறை எவ்வளவு தான் கண்காணிப்பில் ஈடுபடுவது?

ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டியது கடமையல்லவா? எனவே யாரும் தங்களது இருசக்கர வாகனங்களை வெளிநாட்டினருக்கு தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் விதிமீறலில் ஈடுபடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்போல் பகுதியில் இரவு தொடங்கி அதிகாலை வரை வெளிநாட்டினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் உள்ளூர் மக்களின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் ஓட்டல்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேறிவிட்டனர். தற்போது வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஆரம்போல் பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் தங்கி இருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது ஊரடங்கை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சலூனில் ஒளிந்திருந்த ஆபத்து; இத்தனை பேரை அடுத்தடுத்து தாக்கிய கொரோனா!

முந்திரி தோட்டத்திற்கு செல்வதற்கு தற்போது பயமாக இருக்கிறது. ஏனெனில் அங்கு 25 - 30 வெளிநாட்டினர் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றனர். புகை பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அங்கேயே சமைத்தும் சாப்பிடுகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் எங்களைத் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி