ஆப்நகரம்

எனக்கும் அந்த கசப்பான அனுபவம் நேர்ந்துள்ளது: நினைவுகூரும் ப.சிதம்பரம்

ஹிந்தி மொழி தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழிக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது நிகழ்ந்துள்ள கசப்பான அனுபவம் தமக்கும் நேர்ந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Aug 2020, 4:13 pm
தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி டெல்லி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி ஒருவர், ஹிந்தி மொழியில் எதோ கேட்டுள்ளார்.
Samayam Tamil pc


அதற்குக் கனிமொழி, "எனக்கு ஹிந்தி தெரியாது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்" எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த பெண் அதிகாரி, "இந்தி தெரியவில்லையா, நீங்கள் ஒரு இந்தியரா?" எனக் கேள்வியெழுப்பினார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் கனிமொழிக்கு தற்போது நேர்ந்துள்ள அனுபவம் தமக்கும் நேர்ந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நீ ஒரு இந்தியரா? கனிமொழியிடம், பெண் அதிகாரி கேள்வி!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " கனிமொழி எம்.பி.க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.

மத்திய அரசு பணியென்றால் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி