ஆப்நகரம்

ட்ரம்புக்காக பட்டினி கிடந்த தெலங்கானா விவசாயி மரணம்..!

தெலங்கானா அருகே ட்ரம்புக்காக விரதம் இருந்து பிராத்தனை செய்து வந்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 12 Oct 2020, 2:34 pm
தெலங்கானா மாநிலம் மேடாக் மாவட்டத்தில் உள்ள ஐங்கோவன் பகுதியைச் சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ண ராஜு. விவசாயியான இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அதீத அன்பு கொண்டவராக இருந்து வந்தார். ட்ரம்பின் விடாமுயற்சி, அவருடைய அரசியல் நடவடிக்கைகள், பேச்சு என அனைத்தும் கிருஷ்ண ராஜூவை கவர்ந்ததால், வீட்டருகே அவருக்கு 6 அடியில் சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வந்தார்.
Samayam Tamil Bussa Krishna Raju


கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் கவலையடைந்த கிருஷ்ண ராஜு விரதம் இருந்து பிராத்தனை செய்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ண ராஜு மாரடைப்பால் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர்களை சந்திக்க வாய்ப்பு தரகோரியும் கிருஷ்ண ராஜு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். தனது கடைசி காலத்தில் பெரும்பாலான நாட்களை ட்ரம்பை மட்டுமே நினைத்து அவரது வழியை பின்தொடர்ந்து வந்த கிருஷ்ண ராஜு மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி