ஆப்நகரம்

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் இப்போது முதியோர் இல்லத்தில்!

இந்தியா தேர்தல் முறையில் மறுமலர்ச்சி செய்தவராக கருதப்படும் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இப்போது சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளார்

Samayam Tamil 12 Jan 2018, 10:32 am
சென்னை: இந்தியா தேர்தல் முறையில் மறுமலர்ச்சி செய்தவராக கருதப்படும் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இப்போது சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளார்.
Samayam Tamil former election commissioner tn seshan lives in an old age home in chennai
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் இப்போது முதியோர் இல்லத்தில்!


இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் டி.என்.சேஷன். தேர்தல் ஆணையராக இருந்தபோது, பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரின் சிறப்பான பணிக்காக இவருக்கு ராமன் மேக்சைசே விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை இல்லாததால், ஓய்விற்கு பின் தற்போது சேஷன் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் அவர்களுக்கென வீடு இருக்கும்போது, அவர்கள் முதியோர் இல்லத்தில் வாழ்வதையே விரும்புகின்றனர். மேலும், தங்களுடைய பணத்தில் அங்குள்ள மற்ற முதியவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி