ஆப்நகரம்

PM Modi: அமைச்சர் பதவி எதுவும் கொடுத்திராதீங்க - எஸ்கேப் ஆன அருண் ஜெட்லி!

மத்திய அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 29 May 2019, 1:54 pm
கடந்த 2014ல் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றார். ஆனால் கடந்த 18 மாதங்களாக உடல்நலக்குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தார்.
Samayam Tamil Arun Jaitley


இதனால் கடைசியாக இடைக்கால பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். சமீபத்தில் நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி, மோடி தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இதுதொடர்பான ஆலோசனையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு, அருண் ஜெட்லி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சமீப காலமாக தனக்கு உடல் நலன் சரியில்லை. என்னை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எனவே அமைச்சர் பதவியில் தொடர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான கடிதத்ததை, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அருண் ஜெட்லி பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி