ஆப்நகரம்

"விஜய் மல்லையா கைது" : கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் ஊழியர்கள் மகிழ்ச்சி..!

தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளதற்கு, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

TNN 18 Apr 2017, 5:06 pm
தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளதற்கு, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil former kingfisher airlines staffs felt happy about mallayas arrest
"விஜய் மல்லையா கைது" : கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் ஊழியர்கள் மகிழ்ச்சி..!


இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு, அதனை கட்டாமல் கடந்தாண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். இந்நிலையில் ஒரு ஆண்டு காலத்திற்கு பிறகு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விஜய் மல்லையா அந்நாட்டு காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ள தகவலறிந்த கிங்பிஷர் ஏர்லைன்சின் முன்னாள் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். “இது உண்மையிலேயே நல்ல செய்தி. விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை கைது செய்திருந்தால், கண்டிப்பாக அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும். இது எனக்கு மட்டும் மகிழ்ச்சியான செய்தி இல்லை. இதுவரை சம்பள பாக்கி அளிக்கப்படாத, பல கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் ஊழியர்களுக்கும் இது சந்தோஷம் அளிக்கக் கூடிய செய்தியாகும்.

நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க லண்டன் பாதுகாப்பான இடம் என மல்லையா நினைத்திருந்தார். ஆனால் அது உண்மை இல்லை என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இறுதியில் நீதி வென்றுள்ளது.” என கிங்பிஷர் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா துவங்கிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை திடீரென மல்லையா மூடினார். இதனால் அந்நிறுவனத்தில் வேலை பார்த்த பல நூறு ஊழியர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு தர வேண்டிய சம்பள பாக்கி,தற்போது வரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Former Kingfisher Airlines staffs felt happy about Mallaya's arrest

அடுத்த செய்தி