ஆப்நகரம்

பாவம் குல்பூஷன் ஜாதவ்; இப்படியொரு நிலையில் இருக்கிறார்- வெளியுறவுத்துறை அமைச்சகம்!

பாகிஸ்தானில் சிறைவாசம் அனுபவித்து வரும் குல்பூஷன் ஜாதவ், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2019, 9:00 pm
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானிற்கு சென்று உளவு பார்த்ததாகக் கூறி, கடந்த 2016ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil kulbhushan jadhav


இதையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இது இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு- டெல்லி சிறப்பு நீதிமன்றம்!

உடனே சர்வதேச நீதிமன்றத்தை அணுகி, மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய கடந்த ஜூலை 17ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும் அவருக்கு அளிக்க வேண்டிய சட்ட ரீதியிலான உரிமைகள், தூதரக உதவிகளை செய்து கொடுக்குமாறு பாகிஸ்தானிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்தது.

மிஸ்ஸான வெட்டுருவா மீசை; க்யூட்டா வந்து மாஸ் காட்டிய அபிநந்தன் - மீண்டும் போர் விமானத்தை இயக்கி அசத்தல்!

இந்நிலையில் குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானிற்கான இந்திய தூதர் கவுரவ் அலுவாலியா இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், குல்பூஷன் ஜாதவ் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். பாகிஸ்தானின் பொய்யான கருத்துகளை உயர்த்திப் பிடிக்க வற்புறுத்தப் படுகிறார் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

ப்ளீஸ் ஜெயில் வேண்டாமே; உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வாதம்!

அடுத்த செய்தி