ஆப்நகரம்

வரும் 23ம் தேதி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் வாஜ்பாய் அஸ்தி!

நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாய் அஸ்தி, 23ம் தேதி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.

Samayam Tamil 21 Aug 2018, 12:10 pm
நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாய் அஸ்தி, 23ம் தேதி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.
Samayam Tamil bihari


முன்னாள் பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 17ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது அஸ்தியை நாட்டில் உள்ள முக்கிய நதிகள் அனைத்திலும் கரைப்பது என்று பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று அஞ்சலி செலுத்தவும், அஸ்தியை சென்னைக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அஸ்தி கிடைப்பதில் காலதாமதம் ஆனதால், நாளை மாலை அஸ்தி சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. இதில், அனைத்து மாநில பாஜக தலைவவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பிறகு அனைத்து மாநில தலைவர்களும் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக்கொண்டு, மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது வாஜ்பாயின் அஸ்தி

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அஸ்தியை பெற்றுக்கொண்டு நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை திரும்ப இருக்கிறார். இதையடுத்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு 23ம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து சென்னை அடையாறு, ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரை வைகை ஆறு, ஈரோடு பவானி ஆறு, திருச்சி காவிரி ஆறு ஆகிய இடங்களில் அஸ்தி கரைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி