ஆப்நகரம்

சந்திர கிரகண தீய விளைவுகளை தடுக்க முன்னாள் பிரதமர் சிறப்பு பிரார்த்தனை

21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் தீய விளைவுகளை போக்க முன்னாள் பிரதமர் தேவ கெளடா சிறப்பு பூஜை செய்துள்ளார்.

Samayam Tamil 27 Jul 2018, 12:54 pm
பெங்களூரு : 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் தீய விளைவுகளை போக்க முன்னாள் பிரதமர் தேவ கெளடா சிறப்பு பூஜை செய்துள்ளார்.
Samayam Tamil deva gowda


சூரியன், புவி, சந்திரன் மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளி சந்திரனுக்கு செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் தொடங்குகிறது.

இரவு 1 மணியளவில் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பின்னர் 103 நிமிடங்கள் நீடித்து, அதிகாலை 2.43 மணிக்கு சந்திர கிரகணம் முடிகிறது. கிரகணத்தின் போது ரத்த சிவப்பு நிறத்தில் நிலா காட்சியளிக்கும். இது 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 11.54க்கு தொடங்கி, நாளை அதிகாலை 3.49 வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பாக, வீட்டில் உள்ள தண்ணீர்க் குடம், உணவுப் பாத்திரங்களில் தர்ப்பையை வைத்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால் எந்தவித கதிர்வீச்சும் நெருங்காது. கிரகணம் முடிந்ததும் நீராட வேண்டும்.

சிறப்பு பூஜை :இந்த சந்திர கிரகணத்தால் ஏற்படும் தீய விளைவுகளை தடுக்க அம்மனிடம் முன்னாள் பிரதமர் தேவ கெளடா மற்றும் அவரது மனைவி சண்ணம்மா தனது வீட்டில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

அடுத்த செய்தி