ஆப்நகரம்

அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று

2002ம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார். இவரின் பதவி காலத்தில் அனைவராலும் மிகவும் போற்றப்பட்ட குடியரசுத் தலைவராக இருந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Samayam Tamil 27 Jul 2019, 10:42 am
இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங் பகுதியில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டு மொத்த இந்தியாவை உழுக்கியது.
Samayam Tamil abdul kalam


இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். இதற்கு காரணம் அவர் இளைஞர்கள்மீது வைத்திருந்த நம்பிக்கைதான். அவர் இளைஞர்களிடம் கனவு காணுங்கள் எனக் கூறி பின்னர் அந்தக் கனவை நிஜமாக்க பாடுபடுங்கள் என்று அறிவுறுத்தினார். அவரின் இந்த வாக்கியம் இளைஞர்கள் பலருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.

2002ம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தார். இவரின் பதவி காலத்தில் அனைவராலும் மிகவும் போற்றப்பட்ட குடியரசுத் தலைவராக இருந்தார்.

ஏனென்றால் அவர் குடியரசுத் தலைவராக இருந்தப் போதும் மாணவர்களை சந்திப்பது, அவர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களை செய்ய தவறியதிவில்லை. அதேபோல அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது நகர்புற வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு வருவது(PURA) குறித்து அப்போதைய மத்திய அரசுடன் தீவிரமாக ஆலோசித்து வந்தார்.

அத்துடன் தனது அரசு முறை பயணமாக ஐரோப்பிய சென்றப் போது ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் உரையாற்றினார். அந்த உரையில் அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கலியன் பூங்குன்றனாரின் வரிகளை சுட்டுக்காட்டி, உலக மக்கள் அனைவரும் ஒன்றானவர்கள் எனக் கூறினார். இவரின் இந்தப் பேச்சு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் இந்தியா 2020 என்ற கனவு திட்டத்தையும் முன்வைத்திருந்தார். அடுத்த ஆண்டிற்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் நிறைவேற்ற முடியாது என்றாலும் நாம் அதை நோக்கி பயனிப்பதே அவருக்கு நாம் கொடுக்கும் அஞ்சலியாக இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. இவரின் நினைவு நாளான இன்று ட்விட்டரில் மக்கள் அனைவரும் என்ற ஹேஸ்டேக்கில் இவர் குறித்து பதிவிட்டுவருகின்றனர். இந்திய அளவில் அது டிரெண்டாகி வருகிறது.

அடுத்த செய்தி