ஆப்நகரம்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை... மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 8:34 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று காலை ( ஆகஸ்ட் 10) அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil pranab health


இதனைத் தொடர்ந்து, மூளை ரத்தக்குழாயில் அவருக்கு ரத்தம் உறைந்ததையடுத்து, அதனை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டாலும், தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ,பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

முன்னதாக, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், சமீபகாலமாக தம்மை தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி தமது ட்விட்டர் பதிவில் கேட்டு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி