ஆப்நகரம்

வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா... பிகார் விமான நிலையத்தில் பரபர

பிகாரின் கயா விமான நிலையத்திற்கு வந்த நான்கு வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Dec 2022, 3:46 pm
பிகாரின் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வந்தவர்களில் மியான்மரில் இருந்து ஒருவர், தாய்லாந்தில் இருந்து ஒருவர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து இரண்டு பேர் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil bihar corona


வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் RTPCR சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கண்ட நபர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்கு பேரும் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பௌத்த யாத்திரைக்கான முக்கிய இடமான பிகார் போத்கயாவில் மஹோத்சவை நடத்தப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தனது கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதற்கு மத்தியில் கயா மாவட்டத்தின் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் ரஞ்சன் சிங் கூறுகையில், கொரோனா வழக்குகள் இன்னும் தீவிரமாகவில்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். வார இறுதியில் கயா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டவர்கள் 33 பேருக்கு RTPCR சோதனை நடத்தப்பட்டது. இதில், நான்கு பேருக்கு தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவில் இருந்து திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என தெரிவித்தார்.

இந்தியாவில் இன்று திங்கள்கிழமை 196 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், மொத்த வழக்கு 3,428 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இந்தியாவில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,77,302) பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இரண்டு புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,695 ஆக உள்ளது.

அடுத்த செய்தி