ஆப்நகரம்

நெடுஞ்சாலை கழிப்பறையில் மோதிய கார்: 4 பேர் பலி

கார் சாலையோர மின்கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. தொடர்ந்து அருகில் இருந்த கழிப்பறையின் சுவர் மீதும் கார் மோதியுள்ளது. அடுத்தடுத்த மோதலால் கார் எஞ்சின் சட்டென தீப்பிடித்துள்ளது.

TIMESOFINDIA.COM 22 Feb 2019, 12:03 pm
நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த கழிப்பறை மீது மோதிய கார் தீ பற்றி எரிந்ததில் காரில் பயணித்த நான்கு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil 68105099


கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் விவேக் நாயக். 52 வயதான இவர் தனது மனைவி ரேஷ்மா (45) மற்றும் குழந்தைகள் வினந்தி (12) மற்றும் வினீத் (4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விவேக் பெங்களூரில் உள்ள ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம் ஒன்றில் பணயாற்றியுள்ளார்.

விவேக் தன் குடும்பத்தினருடன் பெங்களூரிலிருந்து ஹாசனுக்கு வியாழக்கிழமை காலை காரில் சென்றிருக்கிறார். காலை 8.30 மணி அளவில் சென்னராயப்பட்டணம் அருகே உள்ள அருகே உள்ள உதயபுரா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களது கார் சாலையோர மின்கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. தொடர்ந்து அருகில் இருந்த கழிப்பறையின் சுவர் மீதும் கார் மோதியுள்ளது.

அடுத்தடுத்த மோதலால் கார் எஞ்சின் சட்டென தீப்பிடித்துள்ளது. சில நொடிகளிலேயே கார் முழுவது தீ பரவியதால் உள்ளே இருந்து யாரும் வெளியேற முடியவில்லை. விபத்து நடந்த பகுதியில் இருந்தவர்கள் காருக்குள் இருந்தவர்களை மீட்ப எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் நான்கு பேரும் காரிலேயே உடல் கருகி பலியானார்கள்.

தகவல் அறிந்து வந்த சென்னராயப்பட்டணம் காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கும் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி