ஆப்நகரம்

கலங்கடிக்கும் புதிய கொரோனா: இந்தியாவில் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் கூடுதலாக 4 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Samayam Tamil 1 Jan 2021, 10:01 pm
இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா பரவி வருவதால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் புதிய கொரோனாவை தடுக்கும் நோக்கில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.
Samayam Tamil Representational image


இந்த தடை அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் நுழைந்துவிட்டனர். இவர்களில் 20 பேருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படிப்படியாக புதிய கொரோனா பரவி வருவதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி இலவசம் கிடையாது: பல்டி அடித்த அரசு!
இந்நிலையில், கூடுதலாக 4 பேருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்துடன், இந்தியாவில் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பரவி வரும் கொரோனா வைரஸை காட்டிலும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்தியாவில் புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 29 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு பிரத்யேக சுகாதார வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வைரலாகும் வலிமை அஜித் குடும்ப போட்டோ: திருவிழாவை ஆரம்பித்த தல ரசிகாஸ்
புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிச்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது.

அடுத்த செய்தி