ஆப்நகரம்

டெல்லி: தேர்தல் நேரம், மீண்டும் துப்பாக்கிச் சூடு!

டெல்லியில் ஹெல்மெட் அணிந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Feb 2020, 12:10 am
டெல்லியில் இன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜாஃப்ராபாத் பகுதியில் மர்மநபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil _be478ffe-49c2-11ea-8b8c-fba542a06006


இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல் துறை கூறுகையில், “ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் ஜவுளிக் கடையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 2 முறை சுட்டனர். அதன்பின் சாலைக்குச் சென்ற அந்த இருவரும் தங்கள் பைக்கில் ஏறி அமர்ந்து மீண்டும் 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்” என்றனர்.

4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகப் புகார்கள் பதிவாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை மதியம் 1: 30மணிக்குத் தகவல் வந்துள்ளது.

Fake Alert: கெஜ்ரிவால் மீண்டும் முதல்வரானால் தன் பதவியை ராஜினாமா செய்வதாக சொன்னாரா அமித் ஷா?

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், வந்தவர்கள் தங்கள் முகத்தை மறைத்து வந்துள்ளனர் என்பதும், அவர்கள் வைத்திருந்த பைக் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி வடகிழக்கு காவல் துறை கமிஷ்னர் வேத் பிரகாஷ் சூர்யா கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக் கடை உரிமையாளர் மீது முன்விரோதம் காரணமாக யாரேனும் இதைச் செய்திருக்கலாம் சந்தேகிக்கிறோம்” எனக் கூறினார்.

நடிகர் விஜயை விடாமல் துரத்தும் பாஜகவினர்... கேரள பட்ஜெட் ஆவண அட்டையில் காந்தி படுகொலை ஓவியம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்

இந்த தாக்குதல் சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட ஜவுளிக் கடையின் உரிமையாளர் ஷாபிர் கான்(50) கூறுகையில், “கடை வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் கடையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து வெட்ட வெளியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நானும் எனது சகோதரரும் பயந்துபோய், கடைக்குள் ஓடிச் சென்று ஒழிந்து கொண்டோம்” என்றார்.

அடுத்த செய்தி