ஆப்நகரம்

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Samayam Tamil 4 Aug 2018, 10:32 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil jam
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் பலி!


ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கில்லோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் முதற்கட்டமாக ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அவனது உடல் கைப்பற்றப்பட்டதுடன், அவன் பயன்படுத்திய ஏகே-47 ரக துப்பாக்கியும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் கொல்லப்பட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த உமர் மாலிக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இதனிடையே, கில்லோரா கிராமத்தில் இன்று நடந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே மீண்டும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கில்லோரா கிராமத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்