ஆப்நகரம்

கேரளாவில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மரணம்!

கேரள மாநிலத்தில், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 16 Apr 2017, 9:26 am
கேரள மாநிலத்தில், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil four year old dies after allegedly eating jelly candy in kozhikode mother serious
கேரளாவில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மரணம்!


கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டியைச் சேர்ந்தவர் பஷீர். இவரது 4 வயது மகன் யூசுப் அலி. கடந்த வெள்ளிக்கிழமை யூசுப் அலி, அவனது தாயார் சுஹரா பீ(41), இருவரும் கோழிக்கோட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.

அப்போது, நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் ஜெல்லி மிட்டாய் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சில மணி நேரங்களில், வீட்டுக்குச் சென்றதும் இருவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். உடனே, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக, தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிறுவன் யூசுப் நேற்று உயிரிழந்தான். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை நடத்தி, அவனது சடலத்தை, குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். தாயார் சுஹரா பீ தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, குறிப்பிட்ட ஜெல்லி மிட்டாயை விற்பனை செய்த பேக்கரியை போலீசார் சீல் வைத்தனர். அங்கிருந்த ஜெல்லி மிட்டாய்களையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

A four-year-old boy died of suspected food poisoning and his mother was hospitalized after allegedly eating jelly-candy at a bakery here, police said.

அடுத்த செய்தி