ஆப்நகரம்

அனைவருக்கும் இலவசம்; தெறிக்கவிட்ட பாஜக - ஆச்சரியத்தில் மக்கள்!

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக அனைவருக்கும் இலவசம் என்ற அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 22 Oct 2020, 1:18 pm
பிஹார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது. இந்த சூழலில் பாஜக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சரும், பாஜக தலைவருமான நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது மத்திய அமைச்சரும், பாட்னா சாஹிப் எம்.பி ரவி சங்கர் பிரசாத் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான புபேந்தர் யாதவ், நித்யானந்த் ராய், அஸ்வினி சவுபே, பிரமோத் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Samayam Tamil Nirmala Sitharaman


அதில், கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்க விரும்புகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன், பிஹார் மாநிலத்தில் உள்ள அனைவருக்கு தடுப்பூசி போடப்படும். இதனை மிக முக்கியமான வாக்குறுதியாக நாங்கள் அளிக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், கோவிட்-19 தடுப்பூசி வெற்றிகரமாக பயன்பாட்டிற்கு வந்த பின்னர், பிஹார் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும். இதுதான் எங்களின் முதல் வாக்குறுதி. இம்மாநிலத்தில் உள்ள அனைவரும் அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.

ஐஸ்வர்யா ராய்க்கு நேர்ந்த கொடுமை; பிரச்சாரத்தில் வெடித்த குடும்பப் பிரச்சினை!

நன்றாக விவரம் அறிந்தவர்கள். நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை புரிந்து கொள்வர். எங்கள் தேர்தல் அறிக்கையின் மீது யார் கேள்விகள் எழுப்பினாலும், அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். எங்களின் அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, பிஹார் மாநிலத்தில் ஜிடிபி படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதுவே 15 ஆண்டுகால ஜங்கிள் ராஜ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவது தான் எங்கள் அரசின் நோக்கம் என்று கூறினார். வரும் நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

அடுத்த செய்தி