ஆப்நகரம்

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Sep 2020, 8:48 pm
திருப்பதியில் செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Samayam Tamil file pic


கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பதி கோவில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அறிவித்த தேவஸ்தானம், அடுத்தடுத்து கோவில் அச்சகர்கள், மேளம் வாசிப்பாளர்கள் என தேவஸ்தான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்தது. இருப்பினும் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் வரை இலவச தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி