ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை புகாரில் பால கங்காதர திலகர் பேரன் கைது!

விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் பேரன் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 18 Jul 2017, 1:27 pm
விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் பேரன் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil freedom fighter bal gangadhar tilaks great grandson accused of rape
பாலியல் வன்கொடுமை புகாரில் பால கங்காதர திலகர் பேரன் கைது!


புனேவில் வாழ்ந்து வரும் ரோகித் திலக், மஹாராஷ்ட்ரா காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். இவர் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன். இவர் தாத்தா ஜெயந்த்ராவ் திலக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

ரோஹித் திலக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புனே போலீசில் 40 வயது பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ரோஹித் மீது பாலியல் குற்றச்சாட்டு, மிரட்டல் என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை புனே காவல்துறை இன்று காலை கைதுசெய்துள்ளது. இந்த வழக்கு குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PUNE: Congress leader Rohit Tilak, who is the great-grandson of freedom fighter Bal Gangadhar Tilak, was today booked for allegedly raping a woman and forcing her into "unnatural" sex, the police said.

அடுத்த செய்தி