ஆப்நகரம்

மீண்டும் கடுமையான ஊரடங்கு.. கொரோனா பாதிப்பு உயர்வால் அதிரடி நடவடிக்கை!

கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிர அரசு.

Samayam Tamil 18 Feb 2021, 11:27 pm
மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்திலும், தலைநகர் மும்பையிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது.
Samayam Tamil mumbai trains


நாங்க கடுப்புல இருக்கோம்.. கொந்தளிக்கும் விவசாயிகள்!
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுதல், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹல் தெரிவித்துள்ளார். அமராவதி, யவத்மல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா. அமைதிப் படைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி: இந்தியா அறிவிப்பு!
அமராவதியில் திங்கள்கிழமை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் ரயில்களில் மாஸ்க் போடாமல் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 300 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் குறைந்தது 25,000 பேர் மீது நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபங்கள், கிளப்புகள், உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து கொரோனா நோயாளிகளுக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்.

அடுத்த செய்தி