ஆப்நகரம்

உணவு பொருட்களை செய்திதாளில் பார்சல் செய்ய தடை

உணவகங்களில் உணவு பொருட்களை செய்திதாள்களில் பார்சல் செய்து விநியோகிக்க தடை வித்தித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

TNN 9 Dec 2016, 5:39 pm
உணவகங்களில் உணவு பொருட்களை செய்திதாள்களில் பார்சல் செய்து விநியோகிக்க தடை வித்தித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil fssai ban use of newspapers for packing food
உணவு பொருட்களை செய்திதாளில் பார்சல் செய்ய தடை


நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்களில் உணவு பொருட்களை வாங்குவோர்க்கு செய்திதாளில் தான் பார்சல் செய்தது தான் உணவுகள் விநியோகிக்கப்படுகின்றனர். இவ்வாறு செய்தி தாள்களில் பார்சல் செய்த உணவுகளை உண்பதால் அந்த செய்திதாளில் உள்ள மை மூலம் மக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் , குறிப்பாக புற்று நோய் உருவாக வாய்ப்புள்ளதால் அவற்றிற்கு தடை வித்தித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உணவுப் பொருட்களை செய்திதாள்களில் பார்சல் செய்ய இன்று முதல் தடைவித்திக்கப்படுவதாகவும் மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. சாதராண நடைபாதை கடை முதல் உயர்தர உணவகங்களை வரை செய்திதாள்களில் உணவகங்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில , மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி