ஆப்நகரம்

திருப்பதியில் முழு ஊரடங்கு; அதுவும் இத்தனை நாட்கள் - கொரோனா அச்சத்தால் அதிரடி!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jul 2020, 8:27 am
ஆந்திர மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 53,724 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 24,228 பேர் குணமடைந்துவிட்டனர். 696 பேர் பலியாகியுள்ளனர். 28,800 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். திருப்பதி நகரம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 4,763ஆக உள்ளது. இதில் 3,132 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil Tirupati Lockdown


திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. உரிய பரிசோதனைகளுக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அமர்நாத் யாத்திரை எப்போதுதான் நடக்கும்?

இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஸ்ரீனிவாச மூர்த்தி(75) கொரோனாவிற்கு பலியானார். மேலும் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை மொத்த 15 நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா அறிவித்துள்ளார்.

25 லட்சம் பேர் பாதிப்பு... 110 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம்!

காளஹஸ்தியில் கொரோனா பரவல் காரணமாக ஒருவாரத்திற்கு முன்பிருந்தே முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மருந்து கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்க வேண்டும். பொதுமக்கள் காலை 11 மணிக்கு பிறகு வெளியில் நடமாட வேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி