ஆப்நகரம்

வெறும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு; இந்தக் கடையை மிஸ் பண்ணிடாதீங்க...!

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகக்குறைந்த விலையில் சாப்பாடு விற்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 13 Oct 2020, 6:29 am
ஒரு ரூபாயில் ஒரு வேளை உணவு சாப்பிட முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். இதற்காக நீங்கள் டெல்லியிலுள்ள நங்லோய் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள சிவ மந்திரில் ’ஷியாம் ராசோய்’ என்ற சிறிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை பிரவீன் கோயல் என்பவர் கடந்த 32 மாதங்களாக நடத்தி வருகிறார். நாள்தோறும் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உணவகம் செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் முடங்கியிருக்கிறது. அவர்களின் பசியைப் போக்க இதைவிட சிறந்த இடம் வேறு இருக்க முடியாது என்றே கூறலாம்.
Samayam Tamil Full Thali for Rs.1


மதிய உணவு சாப்பிட வேண்டுமென்றால் நேராக ’ஷியாம் ரசோய்’க்கு சென்று விடுங்கள். இதுபற்றி கடையின் ஊழியர் பர்வீன் குமார் கூறுகையில், தினமும் 1,000 முதல் 1,100 பேர் வரை உணவு அளிக்கிறோம். அருகிலுள்ள இந்தர்லோக், சாய் மந்திர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இ-ரிக்‌ஷா மூலம் பார்சலும் வழங்குகிறோம். ஒட்டுமொத்தமாக 2,000 பேர் எங்களின் உணவை உண்கின்றனர்.

தொடக்கத்தில் முழு சாப்பாடு 10 ரூபாய்க்கு தான் விற்று வந்தோம். இந்த சூழலில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் விலையை ஒரு ரூபாயாக குறைத்துக் கொண்டோம். இங்கு 6 பேர் வேலை செய்கின்றனர். நாள்தோறும் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து, அவர்களுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளம் பெறுகிறோம். எங்களுக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

குட்டி பையனின் கெத்தான ஆர்மி சல்யூட்; செமயா வைரலாகும் க்யூட் வீடியோ!

சமீபத்தில் மூதாட்டி ஒருவர் எங்களுக்கு கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை அளித்துச் சென்றார். இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும். டிஜிட்டல் பேமெண்ட் மூலமாகவும் எங்களுக்கு உதவி செய்கின்றனர். எனவே அனைவரும் எங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்து, இந்த சேவை தொடர வாய்ப்பளிக்க வேண்டும்.

பலரும் எங்களிடம் தொடர்ச்சியாக வந்து உணவு உண்டு செல்கின்றனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இங்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், இந்த கடையில் சுவை மிகவும் நன்றாக இருக்கும். எங்களுக்கு எந்தவொரு உடல்நலப் பாதிப்பும் வந்ததில்லை. குழந்தைகளும் இங்கே வந்து உண்கின்றனர் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி