ஆப்நகரம்

காந்தியோட கண்ணாடி’யவே திருடிட்டாங்களே..!

குஜராத் மாநிலம், போர்பந்தரில் காந்தி சிலையில் உள்ள மூக்கு கண்ணாடியை காணவில்லை என, போர்பந்தரைச் சேர்ந்த காந்தியவாதி பரேக் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 4 Oct 2017, 11:03 am
குஜராத் மாநிலம், போர்பந்தரில் காந்தி சிலையில் உள்ள மூக்கு கண்ணாடியை காணவில்லை என, போர்பந்தரைச் சேர்ந்த காந்தியவாதி பரேக் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil gandhis spectacles stealing in gujarat porbandhar
காந்தியோட கண்ணாடி’யவே திருடிட்டாங்களே..!


தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் அவரது சிலையில் உள்ள கண்ணாடி திருடப்பட்டிருப்பதால் காந்தியவாதிகள் கவலையடைந்துள்ளனர்.

காந்தியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் போர்பந்தரில் தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையில் உள்ள மூக்கு கண்ணாடியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என காந்தியவாதி பரேக் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காந்தி சிலையை பராமரித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து அக்கறை கொள்ளவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Gandhi's spectacles stealing in Gujarat porbandhar

அடுத்த செய்தி