ஆப்நகரம்

கூகுளை எப்படியெல்லாம் பயன்படுத்துறாங்க; 11 கோவில்களில் அதிரடி கொள்ளை!

மைசூரூ: கூகுள் மேப் உதவியுடன், பல்வேறு கோவில்களில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 26 Jan 2019, 4:25 pm
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மிகவும் எளிதாகி உள்ளன. வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் பொருட்கள் வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
Samayam Tamil Google Map


அந்த வகையில் கூகுளின் தயாரிப்புகளில் ஒன்றான மேப், புதிதாக செல்லும் இடங்களில் எளிமையாக வழிகாட்டுகிறது. இந்நிலையில் கோவிலில் கொள்ளையடிக்க கூகுள் மேப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூரு மற்றும் சாம்ராஜநகர் மாவட்டங்களில் 5 பேர் கொண்ட கும்பல் கோவில்களில் கைவரிசை காட்டியுள்ளது. இவர்கள் 19 வயது முதல் 26 வயது உடையவர்கள். வெவ்வேறு வேலைகள் செய்து வந்த நிலையில், கொள்ளை அடிக்க ஒன்று சேர்ந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதாவது பக்தர்கள் அதிகம் வராத கோவில்களுக்குச் சென்றுள்ளனர். மிகவும் உள்ளே அமைந்துள்ள கோவில்களை கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை அடித்துள்ளனர்.

மைசூரு நகரில் 2 கோவில்களிலும், சாம்ராஜநகரில் 9 கோவில்களிலும் ரூ.2.9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தொடர் கண்காணிப்பு மூலம் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சந்தனக் கட்டை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி