ஆப்நகரம்

சிறையில் போன் பேச அனுமதி கோரும் தாதா

சபர்மதி மத்திய சிறையில் உள்ள குற்றவாளி மனிஷ் கோஸ்வாமி, சிறையினுள் மொபைல் போன் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

TNN 21 May 2016, 2:06 pm
அகமதாபாத்: சபர்மதி மத்திய சிறையில் உள்ள குற்றவாளி மனிஷ் கோஸ்வாமி, சிறையினுள் மொபைல் போன் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
Samayam Tamil gangster demands phone in prison
சிறையில் போன் பேச அனுமதி கோரும் தாதா


மத்திய பிரதேச மாநிலம் விஷால் கோஸ்வாமி கேங்க்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த மனிஷ் கோஸ்வாமி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறை தண்டனை பெற்று வருகிறார். வயதான பெற்றோர்களை பார்த்துக் கொள்ள யாருமமில்லாத காரணத்தால் அவர்களிடம் போனில் பேச அனுமதிக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் மொரேனோ பகுதியில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், அவர்களை சந்தித்து 23 மாதங்களுக்கு மேல் ஆவதாகவும் மனிஷ் தனது மனுவில் கூறியுள்ளார். அகமதாபாத்தில் உறவினர்கள் யாருமில்லாததால் பெற்றோர்களை பற்றி கவலைப்படுவதாகவும் மனிஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். சிறை விதிகளின்படி, கொள்ளை மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுவரும் குற்றவாளிக்கு சிறையினுள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதியில்லை என கோஸ்வாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கோஸ்வாமியின் பெற்றோர்கள் பெயரில் உள்ள இரண்டு நம்பருக்கு மட்டும் தொடர்புக் கொள்ள அனுமதி வழங்குமாறு மனுவில் தெரிவித்துள்ளார். கோஸ்வாமியின் மனுவை சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். மனிஷ் கோஸ்வாமி, சபர்மதி சிறையில் கடந்த 24 மாதங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

அடுத்த செய்தி