ஆப்நகரம்

இந்தியர்களின் வங்கி விவரங்களை ரூ.500 கோடிக்கு விற்ற கும்பல்.!

இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, மொபைல் எண் மற்றும் இ-மெயில் உள்ளிட்ட ரகசிய தகவல்களை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

TNN 17 Oct 2017, 11:23 am
இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, மொபைல் எண் மற்றும் இ-மெயில் உள்ளிட்ட ரகசிய தகவல்களை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil gangster sold indian bank details for rs 500 crore
இந்தியர்களின் வங்கி விவரங்களை ரூ.500 கோடிக்கு விற்ற கும்பல்.!


மத்திய பிரதேச மாநிலம் இநு்தூரை சேர்ந்த ஜெய்கிஷன் குப்தா என்ற பெண், கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி தனது கிரடிட் கார்டை சிலர் தவறாக பயன்படுத்தி ரூ.72,401 திருடியிருப்பதாக சைபர் போலீசாரிடம் புகார் தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையை சேர்ந்த ராஜ்குமார் பிள்ளை மற்றும் ராம்பிரசாத் நாடார் ஆகியோர், ஜெய்கிஷன் கார்டு தகவல்களை பயன்படுத்தி, விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜ்குமார் ஐடி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பதும், ராம்பிரசாத் தனியார் வங்கி முன்னாள் ஊழியர் என்பதும் தெரிந்தது. அவர்கள் கிரெடிட் கார்டு விவரங்களை சர்வதேச இணையதளங்களில் பயன்படுத்தியதும், அவர்களின் தலைவனாக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் செயல்படுவதும் தெரியவந்தது.

மேலும், இந்த கும்பல் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு, மொபைல் எண் மற்றும் இ-மெயில் உள்ளிட்ட ரகசிய தகவல்களை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500 கோடிக்கு விற்றுள்ளதாக மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

Gangster sold Indian bank details for Rs 500 crore.

அடுத்த செய்தி