ஆப்நகரம்

கத்துவா தொடா்ந்து சூரத்தில் 86 காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியின் உடல்

சூரத்தில் 9 வயது சிறுமியின் உடலை காவல் துறையினா் மீட்டுள்ளனா். சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 4:19 pm
சூரத்தில் 9 வயது சிறுமியின் உடலை காவல் துறையினா் மீட்டுள்ளனா். சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Child Abuse 1


கடந்த 6ம் தேதி சூரத்தின் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு கிாிக்கெட் மைதானத்திற்கு அருகில் இருந்து 9 முதல் 11 வயதுடைய சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தொடா்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற பிரேத பாிசோதனையில் அந்த பெண் குழந்தை 8 நாள்கள் தொடா்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டதற்கான தடயங்கள் உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவா்கள் கூறுகையில், “சிறுமியின் உடலில் பெண் உறுப்பு உள்பட 86 இடங்களில் காயம் இருந்தது. சிறுமிக்கு போதை மருந்து அளிக்கப்பட்டதா என்பதை அறிய ரத்த மாதிாிகள் சேகாிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளன” என்று தொிவித்துள்ளாா்.

மேலும் காவல் துறையினா் கூறுகையில், “சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு தற்போது வரை 8 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் சிறுமியின் உறவினா்கள் யாரும் முன்வரவில்லை. எனவே சமீபத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறுமியின் உறவினா்கள் குறித்து தகவல் தொிவிப்பவா்களுக்கு சன்மானம் வழங்கப்படும்” என்றும் தொவித்துள்ளனா்.

அடுத்த செய்தி