ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை அனைத்து மாணவியரின் கல்விச்செலவையும் அரசே ஏற்கும் புதிய திட்டத்தை கர்நாடக அரசு அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை ஆகும் கல்விச்செலவை அரசே ஏற்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் அமலாகும் இத்திட்டத்தின் கீழ் மாணவியர் முதலில் கல்விக்கட்டணங்களைச் செலுத்திவிட வேண்டும். பின்னர், அரசு அத்தொகையை முழுமையாக திருப்பி அளிக்கும். இதில், தேர்வுக் கட்டணங்கள் அடங்காது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என்றும் இதனால் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 18 லட்சம் மாணவியர் பயன்பெறுவார்கள் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி ரூபாய் வரை அரசு செலவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை ஆகும் கல்விச்செலவை அரசே ஏற்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் அமலாகும் இத்திட்டத்தின் கீழ் மாணவியர் முதலில் கல்விக்கட்டணங்களைச் செலுத்திவிட வேண்டும். பின்னர், அரசு அத்தொகையை முழுமையாக திருப்பி அளிக்கும். இதில், தேர்வுக் கட்டணங்கள் அடங்காது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என்றும் இதனால் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 18 லட்சம் மாணவியர் பயன்பெறுவார்கள் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி ரூபாய் வரை அரசு செலவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.