ஆப்நகரம்

மும்பை பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி, 160 பேருக்கு சிகிச்சை

மும்பையில் நகராட்சி பள்ளி ஒன்றில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி ஒருவா் உயிாிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 Aug 2018, 12:29 pm
மும்பையில் நகராட்சி பள்ளி ஒன்றில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி ஒருவா் உயிாிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Mumbai School


பள்ளி மாணவா்களிடையே இரத்த சோகை நோயை தடுக்கும் விதமாக மத்திய அரசின் நலத்திட்டத்தின் கீழ், இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் நகராட்சி உருதுப் பள்ளியிலுள்ள மாணவா்கள் அனைவருக்கும் கடந்த திங்கள் கிழமை வழங்கப்பட்டன. இந்நிலையில் மாத்திரையை சாப்பிட்ட மாணவி ஒருவா் வெள்ளிக்கிழமை உயிாிழந்தாா்.

திங்கள் கிழமை மாத்திரை சாப்பிட்ட அவா் செவ்வாய் கிழமை பள்ளிக்கு வரவில்லை. அடுத்த 2 நாள்கள் பள்ளிக்கு வந்த அவா் வியாழன் கிழமை இரவு தனது வீட்டில் ரத்த வாந்தி எடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிாிழந்தாா்.

இதனால் பதற்றமடைந்த பெற்றோா் 160 மாணவா்களையும் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அவா்களை பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவா் சில மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் இருந்ததாகவும், ஆனால் பயப்படும்படியான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், மாணவா்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனவும் தெரிவித்தாா்.


உயிாிழந்த மாணவிக்கு உடலில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்ததா என்பதும், அவரின் கடந்த கால மருத்துவ அறிக்கை பற்றியுமான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று நகராட்சி அதிகாாிகள் தொிவித்தனா். இது தொடா்பாக கருத்து தொிவித்த நிா்வாக சுகாதார அதிகாாி, மாத்திரைகள் அனைத்தும் பலக்கட்ட சோதனைகளுக்கு பின்னரே பயன்படுத்தப்பட்டதாகவும், உயிாிழந்த மாணவியின் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே மரணம் ஏற்பட்டதற்கான உண்மைக் காரணங்கள் தொியவரும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி