ஆப்நகரம்

பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் மனு!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்றுக்கொண்டு மோசடி செய்த, மெகுல் சோக்ஸி தனக்கு வழங்கப்பட்டுள்ள பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2018, 5:39 pm
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்றுக்கொண்டு மோசடி செய்த, மெகுல் சோக்ஸி தனக்கு வழங்கப்பட்டுள்ள பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் மனு!!
பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் மனு!!


வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரது மருமகன் மெகுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார 13,600 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.

இந்த குற்றம் வெளிவருவதற்கு முன்பாகவே வெளிநாட்டிற்கு தப்பியோடிய இவர்கள் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மெகுல் சோக்ஸி தனக்கு அளிக்கப்பட்டுள்ள பிடிஆணையில் விடுவிக்க முடியாத பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சட்டப்பிரிவு 70(2) CrPC இன் கீழ் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அடுத்த செய்தி