ஆப்நகரம்

மோடியிடம் தேநீர் குடித்தவர்களுக்கு ரூ. 2 லட்சம்: திக்விஜய் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியிடம் படித்தவர்களுக்கு அல்லது அவரிடம் தேநீர் வாங்கிக் குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு தருவதாக காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் அறிவித்துள்ளார்.

TOI Contributor 17 Jun 2016, 1:07 pm
பிரதமர் நரேந்திர மோடியிடம் படித்தவர்களுக்கு அல்லது அவரிடம் தேநீர் வாங்கிக் குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு தருவதாக காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் அறிவித்துள்ளார்.
Samayam Tamil giving rs 2 lakh if anyone who bought tea from modi digvijaya singh
மோடியிடம் தேநீர் குடித்தவர்களுக்கு ரூ. 2 லட்சம்: திக்விஜய் அறிவிப்பு


மகாராஷ்டிராவில், யவட்மால் மாவட்டம் ஆர்னி என்ற இடத்தில் ''தேநீர் குறித்து ஒரு விவாதம்'' என்ற ஒரு நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் சிவாஜிராவ் மொகே ஏற்பாடு செய்து இருந்தார்.

இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பேசுகையில் அவ்வாறு கூறினார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது ''சாய் பே சர்ச்சா'' என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசி வந்தார். இதையடுத்து யவட்மால் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சிவாஜிராவ் மொகே தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி