கோவா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் உணவு சமைக்கவோ மது அருந்தவோ தடை விதிக்கும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளால் கோவா கடற்கரை அதிகளவில் மாசடைவதாகவும் பெண்களுக்கு அங்கு சரியானப் பாதுகாப்பு இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் பொது இடங்களில்குடிப்பதற்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்ற ஜனவரி 24 ஆம் தேதி கோவா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று பொது இடங்களில் உணவு சமைக்கவோ, மது அருந்தவோ தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இனி கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவெளியில் மது அருந்தக் கூடாது. மது பாட்டில்களை உடைக்கக் கூடாது. திறந்தவெளியில் உணவு சமைக்கக் கூடாது. இந்த தடையை மீறி செயல்படும்தனி நபருக்கு2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே குழுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் அபராதம் செலுத்த தவறும் நபர்களுக்குசிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளால் கோவா கடற்கரை அதிகளவில் மாசடைவதாகவும் பெண்களுக்கு அங்கு சரியானப் பாதுகாப்பு இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் பொது இடங்களில்குடிப்பதற்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்ற ஜனவரி 24 ஆம் தேதி கோவா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று பொது இடங்களில் உணவு சமைக்கவோ, மது அருந்தவோ தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இனி கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவெளியில் மது அருந்தக் கூடாது. மது பாட்டில்களை உடைக்கக் கூடாது. திறந்தவெளியில் உணவு சமைக்கக் கூடாது. இந்த தடையை மீறி செயல்படும்தனி நபருக்கு2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுவே குழுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் அபராதம் செலுத்த தவறும் நபர்களுக்குசிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.