ஆப்நகரம்

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா... மாஸ்க் போடலன்னு சொல்லி ஆட்டை அரெஸ்ட் செஞ்ச போலீஸ்!!

முக்கவசம் (மாஸ்க்) அணியவில்லை எனக் கூறி, ஆட்டை போலீஸ் அரெஸ்ட் செய்த நகைச்சுவை சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 27 Jul 2020, 11:41 pm
கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தும் வருகின்றனர். இதில் தவறொன்றும் இல்லைதான்.
Samayam Tamil goat


ஆனால், உங்களோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கேட்கும்படியான ஒரு சம்பவத்தை உத்தரப்பிரதேச மாநில போலீசார் செய்துள்ளனர்.

அந்த மாநிலத்தின் பிகான்கஞ்ச் பகுதியில் ஆடு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனை கவனித்த கான்பூர் நகர காவல் நிலைய போலீஸார், அந்த ஆடு முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி, அதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குட்டியுடன் குடியிருப்புக்குள் நுழைந்த காண்டாமிருகம்... நெஞ்சை உருக்கும் வீடியோ!!

இதனை கேள்விப்பட்ட ஆட்டின் உரிமையாளர், அலறி அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்துள்ளார். அவரிடம், "ஆட்டுக்கு மாஸ்க் அணிவிக்காமல் பொதுமுடக்க விதிமீறல் செய்துள்ளீர்கள். தற்போதைய கொரோனா காலத்தில் நாய்களுக்கே அவற்றின் உரிமையாளர்கள் முகக்கவசம் அணிவித்துதான் வெளியே அழைத்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது, ஆட்டுக்கு மாஸ்க் அணிவிக்க உங்களுக்கு என்ன கேடு?" என்று போலீஸார் மிரட்டல் தொனியில் கேட்டுள்ளனர்.

உடனே, இனிமே இப்படி நடக்காம பாத்துகிறேன் எஜமான் என்ற ரேஞ்சுக்கு ஆட்டின் உரிமையாளர் பவ்யமாக பதில் சொல்லவே, சரி ஆட்டை கூட்டிட்டு போ என்று பெரிய மனதுடன் போலீசார் அந்த ஆட்டை விடுத்துள்ளனர்.

மகள்களை மாடுகளாக மாற்றிய விவசாயி; டிராக்டரை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்!

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டவுடன், "ஒரு இளைஞன் முகக்கவசம் அணியாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். போலீசை கண்டதும் ஆட்டை அம்போவென விட்டுட்டு அந்த இளைஞன் எஸ்கேப் ஆனார். அதனால்தான் ஆட்டை பிடித்து ஸ்டேஷனில் வைக்க வேண்டியதாகிவிட்டது" என்று போலீஸார் தற்போது சமாளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி