ஆப்நகரம்

ஆடுகளுக்கு கொரோனாவா? கர்நாடகாவில் புதிய அச்சம்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் கர்நாடகாவில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 1 Jul 2020, 9:44 am
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Samayam Tamil goats quarantined in karnataka village


இந்நிலையில் அவர் வளர்த்துவரும் 50க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதால் அவைகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என ஊர் மக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பரிசோதனை செய்தனர்.

அப்போது சில ஆடுகளுக்கு பிபிஆர் எனப்படும் ஆடு பிளேக் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சாத்தான் குளம் விவகாரம்: மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

உலக சுகாதார அமைப்பு, நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை கொரோனா வைரஸ் தாக்காது என்று கூறிவந்தது. பின்னர் சமீபத்தில் அந்த அமைப்பு தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இருப்பினும், தற்போது வரை செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

கொரோனா வைரஸ்: ஒரே மாதத்தில் 12 ஆயிரம் பேர் பலி - கட்டுக்குள் கொண்டு வர என்ன வழி?

கொரோனா வைரஸின் தோற்றம், அது எவ்வாறு மனிதர்களுக்குப் பரவியது, அதன் தன்மை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா வைரஸ் வெவ்வேறு அம்சங்களுடன் காணப்படுகிறது. இதனால் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறிவது தாமதமாகிறது.

அடுத்த செய்தி