ஆப்நகரம்

வருமான வாித்துறை பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளை

ராஜஸ்தான் மாநில வருமான வரித்துறை துணை இயக்குநா் அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

Samayam Tamil 22 Apr 2018, 10:49 pm
ராஜஸ்தான் மாநில வருமான வரித்துறை துணை இயக்குநா் அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
Samayam Tamil Theft


ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வருமான வாித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வருமான வாித்துறை துணை இயக்குநா் அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை இந்த அலுவலகத்திற்குள் நுழைந்த திருடா்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து விட்டு பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை கைப்பற்றி உள்ளனா்.

பின்னா் பாதுகாப்பு பெட்டகத்தின் இரண்டு பெட்டிகளின் சீல்களை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடா்கள் எடுத்துக் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி