ஆப்நகரம்

கோரக்பூர் குழந்தைகள் மரணம்: ஆக்சிஜன் சப்ளையர் கைது

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

TNN 17 Sep 2017, 5:07 pm
கோரக்பூர்: உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Samayam Tamil gorakhpur deaths oxygen supplier arrested
கோரக்பூர் குழந்தைகள் மரணம்: ஆக்சிஜன் சப்ளையர் கைது


அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் புஷ்பா ஏஜென்சியிடம் ஆக்சிசன் சிலிண்டர்களுக்கான பணத்தை அளிக்க லஞ்சம் கேட்டதால், அந்த ஏஜென்சி ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியது தெரியவந்தது.

இதுத் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த புஷ்பா ஏஜென்சியின் உரிமையாளர் மணீஸ் பண்டாரி என்பவரை டொயோரியா பகுதியில் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

Gorakhpur deaths: Oxygen supplier arrested

அடுத்த செய்தி