ஆப்நகரம்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் கோத்தபய ராஜபக்ச!

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்

Samayam Tamil 17 Nov 2019, 8:49 pm
டெல்லி: இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோத்தபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோத்தபய ராஜபக்ச
கோத்தபய ராஜபக்ச


இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

அதில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த அவரது சகோதரருமான பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்திலிருந்து இன்னொருவர்... இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச!!

மொத்தம் 55,64, 239 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ள புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுவதாகவும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்,”இரு நாடுகளின் குடிமக்களுக்கு இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், கோத்தபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சகோதர, கலாசார, வரலாற்று மற்றும் நாகரிக உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி வெளிப்படுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு கோத்தபய ராஜபக்ச நன்றி தெரிவித்ததாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவுடன் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது தயார்நிலையையும் அவர் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோத்தபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதாகவும் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி