ஆப்நகரம்

ஆண்களையே அதிகம் குறிவைக்கும் கொரோனா: நாங்க சொல்லலப்பா... கவர்மென்ட் டேட்டாதான் சொல்லுது!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரில் நான்கில் மூன்று பேர் ஆண்கள் என்று தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2020, 5:41 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோர் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
Samayam Tamil corona male


கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மூன்று இலக்கத்தில் அதிகரித்து வருகிறது.

W.H.O. பெயரில் பொய்கள்... அடுத்தடுத்து ஊரடங்குகள் உண்டா இல்லையா?

இன்று மாலை 4:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனாவுக்கு ஆளானோரின் எண்ணிக்கை நாலாயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 4,067 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்கள், 24 சதவீதத்தினர் பெண்கள் என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை, தேசிய அளவில் 109 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் கொரோனா வைரசுக்கு இரையாகியுள்ளனர்.

இறந்தவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 30 சதவீதத்தினர் 40- 60 வயதுக்குட்பட்டவர்கள். 7 சதவீதத்தினர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு, சிகிச்சைக்காக, தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் 1,100 கோடி ரூபாய் ஏற்கெனவே மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது. இன்று மேலும் 3,000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி