ஆப்நகரம்

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, காஷ்மீரில் நிபந்தனையுடன் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்!

நிபந்தனைகளுடன் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2018, 5:20 pm
டெல்லி: நிபந்தனைகளுடன் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kashmir Ceasefire
காஷ்மீரில் நிபந்தனையுடன் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்


ரம்ஜான் மாதம் இன்று தொடங்கி, வரும் ஜூன் 14ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் இந்த நாட்களில், அதன் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு ராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளது.

அதாவது வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரானது இஸ்லாமிய மதம். இந்த காலக்கட்டத்தில் தேவையின்றி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை அடுத்த 30 நாட்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊடுருவி தாக்குதல், எல்லையில் அத்துமீறல் போன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தானோ அல்லது பயங்கரவாத குழுக்களோ ஈடுபட்டால் பதில் தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களை காப்பதே நமது தலையாய கடமை என்று கூறியுள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெஹபூபா முப்தியும் வழிமொழிந்துள்ளார்.

பல்வேறு கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Government declares conditional ceasefire in J&K during Ramzan.

அடுத்த செய்தி