ஆப்நகரம்

Cinema Halls Reopen: பொது முடக்கத்தில் தளர்வு: பள்ளிகள், தியேட்டர்கள், பூங்காக்களுக்கு அனுமதி!

Unlock Guidelines 5.0: மத்திய அரசு பள்ளிகள், தியேட்டர்கள், பூங்காக்கள் திறக்க இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 15 Oct 2020, 7:32 am
கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஏழு மாதங்களை நெருங்குகிறது. மார்ச் 25 முதல் நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது.
Samayam Tamil theatre open


கொரோனா பரவல் தொடர்ந்து வந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அரசு தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்தவகையில் இன்று (அக்டோபர் 15) முதல் பள்ளிகள், பூங்காக்கள், திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும் சூழலைப் பொறுத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், தனிக் கட்டடங்களில் இயங்கும் திரையரங்குகள், 'மல்டிப்ளக்ஸ்' திரையரங்குகள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும், கூட்டத்தை குறைக்க, கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்சல் செய்யப்பட்ட உணவுகளை மட்டும் விற்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி...அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு?

ஆறு மாதங்களுக்கும் மேலாக திரையரங்கு மூடப்பட்டுள்ளதால், திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள், திரையரங்க ஊழியர்கள் மற்றும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் என பலதரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பொது முடக்கத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த நிலையில் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. பூங்காக்களை திறப்பதற்கு முன்னும், மூடிய பின்னும், அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். முக கவசம் அணியாத பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி